சென்னை, மே 21- தியாகராயர் நகரில் உள்ள அயக்கிரீவர் கோயிலில் 20 பவுன் நகை திருடப் பட்டுள்ளது. இதுகுறித்து வட மாநில ஊழியரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராயர் நகர் இராகவய்யா சாலையில் அயக் கிரீவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள சிலைக்கு அணி விக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் கடந்த 19.4.2024 அன்று திருடப்பட்டன. இது குறித்து கோயில் அறக் கட்டளை மேலா ளர் மதுசூதன் பட் அளித்த புகா ரின்பேரில் சவுந்தரபாண்டியனார் அங்காடி காவல் துறையினர் வழக் குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
கோயிலில் இருந்த கண்கா ணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோயிலில் சமையல் உதவியாளராக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தினகர் திரிபாதி (25), இந்த நகைகளை திருடியது தெரிய வந்தது.
விசாரணையில், கடந்த 14.4.2024 அன்று கோயிலில் சமையல் உதவியாளராக பணிக்கு சேர்ந்த அவர் 19.4.2024 அன்று தேர்தல் என்பதால், கோயிலில் கூட்டம் குறைவாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி நகை களைத் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தினகர் திரிபா தியை தேடிவந்த காவல்துறையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.