உதயநிதி மீதான தாக்குதல் தீய நோக்கம் கொண்டது இரா.முத்தரசன் கண்டனம்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை.செப்.5- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாடு அரசின் இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டா லின், ஸனாதானம். குறித்து தெரிவித்த கருத்து, பகுத்தறி வாளர்கள் தொடர்ந்து முன் வைத்து வருவதுதான். கடந்த காலங்களில் வாய் முடி கடந்து சென்ற பாஜகவும், “ஹிந்துத் துவா”க் கும்பலும் தற்போது வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதித்து வருகின்றன.

ஆதிப் பொதுவுடைமை சமூகம் தகர்ந்து தனியுடைமை சமூகம் உருவானபோது  ஆதிக்க சக்திகளால்  உழைக் கும் மக்களை பிரித்து, பிளவு படுத்தி  வைக்கும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன. அதில் இறுதியாக உருவான தும், பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதும் ஸனாதானக் கருத்தியலாகும். இது பகுத்தறிவுக்கும் சிந்த னைக்கும் அறிவியல் கண் ணோட்டத்திற்கும் எதிரா னது  என்பதுடன் சமூக வளர்ச்சியை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அறிவீனமான துமாகும். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸனாதானா எதிர்ப்பு மாநாட் டில் பேசும் போது, 

“மனித வளத்தை தாக்கி வரும் டெங்கு, மலேரியா காய்ச்சல், கரோனா தொற்று நோய் போல் சமூக ஆரோக் கியத் துக்கு கேடு விளைவிக்கும் ஸனாதானத்தை எதிர்ப்பது டன் நின்று விடக் கூடாது. அதனை அழித்தொழிக்க வேண்டும்” என்று கூறியுள் ளார். 

இது சமய நம்பிக்கையை இழிவு செய்யும்  நோக்கம் கொண்டதல்ல என்பதை சாதாரண அறிவுள்ளோரும் அறிவர். ஆனால், பாஜகவும், சங் பரிவார் கும்பலும் உதயநிதி ஸ்டாலின் ஹிந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியா பாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி, தமிழ்நாடு தலை வர் கே.அண்ணாமலை வரை மத நம்பிக்கை கொண்டவர் களுக்கு மதவெறியூட்டும் மலிவான செயலில் இறங்கி யுள்ளனர். வட மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த, புனைவுக் குற்றச்சாட்டுக்களை வழக்குகளாக பதிவு செய்து வருகிறது. 

இதன் மூலம் நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் தனி நபர் மய்யப்பட்ட சர்வாதிகாரக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வஞ்சகச் செயலில் ஈடுபட்டு  வருவதை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. 

இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக “இண் டியா” அணி நாடு முழுவதும் தீவிரமான இயக்கங்களை மேற்கொண்டு முறியடிக்கும் என்பதை வரலாறு உறுதி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *