ஆவடி மாவட்ட கழக மாதாந்தர கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

திராவிடர் கழகம்

ஆவடி, நவ. 20- ஆவடி மாவட்ட திராவிடர் கழக மாதாந்திர கலந் துரையாடல் கூட்டம் 19-11-2023 அன்று மாலை 05.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

திருநின்றவூர் நகர கழக இளை ஞரணி செயலாளர் சிலம்பரசன் கடவுள் மறுப்பு கூறினார். ஆவடி நகர தலைவர் கோ.முருகன் வர வேற்புரையுடன், மாவட்ட செய லாளர் க.இளவரசன் ஒருங்கிணைப் புடன், மாவட்ட தலைவர் வெ.கார் வேந்தன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. 

தீர்மானங்கள்

மறைந்த கழக மாநில மகளிரணி மேனாள் செயலாளர் களப் போராளி பார்வதி அவர்களுக்கும், தகைசால் தமிழர் விருது பெற்ற சுதந்திர போராட்ட வீரரும் – கம் யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ருமான சங்கரய்யா மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி காத்தனர்.

பின் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பெரியாரியல் பயிற்சி பட்டறை மற்றும் திருநின்றவூர் நகர தெரு முனைக்கூட்டம் ஆகிய வற்றின் வரவு- செலவு கணக்கு ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 09 மற்றும் 10 ஆம் தேதி ஆவடியில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி நிகழ்வை சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. 

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா குறித் தும், விடுதலை சந்தா சேர்த்தல் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் வழிகாட்டி உரையாற்றி னார். 

நிகழ்வில் மாவட்ட மகளிரணி தலைவர் பூவை செல்வி, துணை தலைவர் மு.ரகுபதி, துணை செய லாளர் உடுமலை வடிவேல், திரு முல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், திரு நின்றவூர் நகர செயலாளர் கீதா ராமதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன், பூந்தமல்லி பகுத்தறிவு, சந்திரபாபு, அரவிந்தன் ஆகியோர் உரையாற் றினர். பகுதி வாரியாக அனை வருக்கும் விடுதலை சந்தா சேர்க்க புத்தகம் வழங்கப்பட்டது.இறுதி யில் மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *