கழக காப்பாளர் மு. அய்யனாருக்கு “தண்டமிழ் ஆர்வலர்” விருது!

1 Min Read

தஞ்சாவூர், மே 17- தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மய்ய நூலகம் வாசகர் வட்டம் சார்பாக வணிக நிறுவனங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைத்திருக்கும் நிறுவன உரிமையாளர் களுக்கு ஆண்டுதோறும் “தண்டமிழ் ஆர்வலர்” என்ற விருது வழங்கி பாராட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் கீழவீதி யில் நீண்ட காலமாக நடந்து வருகிற தமது வணிக நிறுவனத்திற்கு “காவேரி மருந்தகம்” என்று நல்லத் தமிழில் பெயர் சூட்டியுள்ள திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனாரைப் பாராட்டி 12.5.2024 அன்று விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விருது பெற்ற காப்பாளர் மு.அய்ய னாரை மாநில தலைமைக் கழக ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி ஆகியோர் 16.05.2024 அன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *