தமிழ்நாட்டில் மின் தேவை கணிசமாக குறைந்தது

1 Min Read

சென்னை, மே 17- கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் மின் தேவை உச்சபட்ச அளவை எட்டி யது. மாநிலம் முழுவதும் மின் சாரத்தின் தேவை அதிகபட்சமாக 21 ஆயிரம் மெகாவாட் ஆக அதி கரித்தது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் வீடுகளில் குளிர்சாதன பயன்பாடு உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் பயன்பாடும் குறைந்தது.

இதனால் மின்சாரத்தின் தேவையும் கணிச மாக தற்போது குறைந்து உள்ளது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு 17 ஆயிரத்து 331 மெகா வாட் டாக குறைந்தது. இது தொடர்ந்து நேற்று (16.5.2024)அதிகாலை 4 மணி அளவில் 13 ஆயிரத்து 831 மெகாவாட்டும், காலை 7.40 மணி அளவில் 14 ஆயிரத்து 709 மெகா வாட் என்ற அளவில் மின்சாரத்தின் தேவை கணிச மாக குறைந்தது. இதனால் அனல் மின்சார நிலை யத்தின் உற்பத்தியும் சற்று குறைக் கப் பட்டு உள்ளது. சோலார் மூலம் உற்பத்தியாகும் 4 ஆயிரத்து 120 மெகாவாட் மின்சாரம் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது. காற்றாலை சீசன் தொடங்காததால் 3 இலக்க எண்களிலேயே உற்பத்தி செய்து வருகிறது. இதுதவிர மத்திய தொகுப் பில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற அளவில் பெறப்பட்டு வினியோகம் செய்யப் பட்டு வருகிறது என்று எரிசக்தித் துறை அதிகாரிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *