மதுரையில் குழந்தைகளுக்கான சமூக உரிமை பயிற்சி

1 Min Read

தமிழ்நாடு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் யூனிசெஃப் நிறுவனம் இணைந்து (13,14/05/24 தேதிகளில் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு நாட்களாக ) குழந்தைகள் பற்றிய செய்தி சேகரிப்பில், செய்தி வெளியிடுவதில் உள்ள சாதக பாதகம் மற்றும் குழந்தைகளுக்கான சமூக உரிமை என்பன பற்றியும்,அதற்காக களத்தில் பணியாற்றி வரும் முன்களப்பணியாளர்களாக உள்ள அனைத்து மாவட்ட பத்திரிகை செய்தியாளர்களை அழைத்து இரண்டு நாள்களாக பயிற்சியை அளித்தார்கள், பயிற்சியாளராக விடுதலை நாளிதழ் சார்பாக மதுரை மாவட்டத்திலிருந்து ஆர்.இராதா, மற்றும் இரா.சுரேசு கலந்து கொண்டனர்.

யூனிசெப் ஆலோசகர் முரளிகிருஷ்ணா, அவர்கள், இரண்டு நாள்களும் சிறப்பான கருத்துக்களை வழங்கியும், பல்வேறுபட்ட தளங்களில் பணியாற்றி வரும் செயல்பாட்டாளர்கள் பலரும் பல்வேறு கோணங்களில் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் ,என்ன மாதிரியான முன்னெடுப்பு செய்ய வேண்டுமென முக்கியமான கருத்துக்களையும் வழங்கினார்.இறுதியாக அனைவருக்கும் அண்ணா பல்கலை கழக ஊடக அறிவியல் துறை தலைவர் அருள்செல்வன் சான்றிதழ் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *