வன்முறை நீடிக்கும் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

புதுடில்லி, செப்.8 மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசை காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித் துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி கலவரம் வெடித்தது. 160-க்கு மேற்பட்டோர் பலியா னார்கள். கலவரத்தை தொடர்ந்து, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களில் பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். 

இதற்கிடையே, கலவரம் வெடித்து 4 மாதங்களை கடந்த நிலையில், வீடுகளை விட்டு வெளி யேறியவர்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்புமாறு மணிப்பூர் ஒருமைப் பாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது. சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ஆனால், தங்களை ராணுவம் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். ராணுவமோ, காவல்துறையோ தடுத்தால் கூட வீடுகளுக்கு செல்வோம் என்று ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. வீடு களுக்கு திரும்பும் முடிவை கைவிடு மாறு மணிப்பூர் மாநில செய்தித் துறை அமைச்சர் சபம் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

டோர்பங் பகுதியில் 700 பேர் தங்கள் வீடுகளில் குடியேறி உள்ள னர். பல இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, பதற்றம் காரணமாக, பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், கக்சிங், தவுபால் ஆகிய மாவட் டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மற்ற 11 மாவட்டங்களில், பகல் நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதற் கிடையே, மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “டில் லியில் ஜி-20 மாநாடு நடக்க போகிறது. ஆனால், மணிப்பூரில் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட் டங்களில் அடுத்த 5 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகும் அங்கு வன்முறை நீடிக்கிறது. ஆனால், மோடியின் இரட்டை என்ஜின் அரசுக்கோ, அங்கு நிலைமை சீராக இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *