அன்னை நாகம்மையாரின் 91ஆம் ஆண்டு நினைவு நாள் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Viduthalai
1 Min Read

அன்னை நாகம்மையாரின் 91ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (11.5.2024) காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் – தந்தை பெரியார் நினைவிட வளாகத்தில் மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்த அன்னை நாகம்மையார் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் அன்னை நாகம்மையார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கழகத் தோழர்களும், பெரியார் திடல் பணித் தோழர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *