தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (7.5.2024) தலைமைச் செயலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் ஜாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.