தமிழ்நாட்டில் குரூப்-1 தேர்வு அறிவிப்புகளை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. குரூப்-1 தேர்வுக்கான தேதி, சலுகை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கூடுதல் விவ ரம் தேவைப்படுவோர் tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் உதவி ஆணையர் (அசிஸ்டென்ட் கமிஷனர்) 21, மாவட்ட கல்வி அதிகாரி 8 என மொத்தம் 29 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
கல்வித்தகுதி: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வ தற்கு ஆர்வலர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, பி.எல்., அல்லது அய்ந்து வருட பி.எல் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஓராண்டு வழக்குரைஞராக பணிய £ற்றிய அனுபவமும் இருக்கவேண்டும். இதுதவிர குரூப்-1 பணியிடத்தின் கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு முதுநிலை பட்ட மேற் படிப்பை (பி.ஜி. பட்டப்படிப்பு) முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 1.7.2024 அடிப்படையில் உதவி ஆணையர் (அசிஸ்டென்ட் கமிஷனர்) 34, மாவட்ட கல்வி அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு ஆகிய வற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் குரூப்-1 பணி யிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி முறையில் இந்த குரூப்-1 பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: தமிழ்நாடு அரசின் குரூப்-1 பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக பிரிலி மினரி தேர்வுக்கு ரூ. 100, மெயின் தேர்வுக்கு ரூ. 200 வீதம் செலுத்தவேண்டும்.
கடைசி நாள்: தமிழ்நாடு அரசின் குரூப்-1 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரும் 22.5.2024ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரம் தேவைப்படு வோர் tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு
Leave a Comment