40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்! தொல். திருமாவளவன் நம்பிக்கை

1 Min Read

அரியலூர், ஏப்.20– தமிழ்நாடு — புதுச்சேரியில் 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வெல் லும் என்று விடுதலைச் சிறுத் தைகள் தலைவர் தொல். திருமா வளவன் நம்பிக்கை தெரிவித் துள்ளார். “இந்த பொதுத் தேர் தல், இரண்டு கட்சிகளுக்கு இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல். எனவே, சங்பரி வாருக்கும், நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம்.
இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்க ளின் பக்கம் ‘இந்தியா’ கூட்டணி கட் சிகள் இருக்கிறோம். இந்திய அரச மைப்பு சட்டத்தைப் பாதுகாக்க இந்த கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
அரசமைப்புச் சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கத் துடிக் கிற ‘சங்- பரிவார்’ கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. இத னால் தான், ஜனநாயகத்தையும், அர சமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலை யோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக் கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *