விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 65 விழுக்காடு

Viduthalai
1 Min Read

நாகர்கோவில், ஏப்.20- விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று (19.4.2024)நடைபெற்றது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறி விக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுடன், விளவங்கோடு தொகு திக்கும் ஒரே கட்டமாக நேற்று (19.4.2024) தேர்தல் நடை பெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், பாரதீய ஜனதா கட்சி சார்பில் நந்தினி, அ.தி.மு.க. சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 10 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர் தலுக்கும் சேர்த்து மொத்தம் 272 வாக்குச்சாவடிகள் இந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 2 லட்சத்து 37 ஆயி ரத்து 741 வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கு ஒரு வாக் கையும், சட்டமன்றத்துக்கு ஒரு வாக்கையும் என ஒவ்வொரு வாக்காளரும் 2 வாக்குகளை செலுத்தினர்.
இந்த நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் 64.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *