மேட்டூர் நீர்மட்டம் 62.24 அடியாக உயர்வு

1 Min Read

தமிழ்நாடு

சேலம், நவ. 21- சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 62.24 அடியாக உயர்ந்துள்ளது. வட கிழக்குப் பருவமழை காரணமாக, காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப் போது கனமழை பெய்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் (19.11.2023) விநாடிக்கு 3,193 கனஅடிவீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், பரவலாக மழை பெய்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,015 கனஅடியாக உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், மேட்டூர் அணையில் இருந்து, காவிரிக் கரையோரங்களில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கான நீர்வரத்தைக் காட்டிலும், நீர் வெளியேற்றம் குறைவாக இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் (20.11.2023) படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 61.83 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 62.24 அடியாக உயர்ந்தது. அதேபோல, 26.07 டிஎம்சி-யாக இருந்த அணையின் நீர் இருப்பு 26.38 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *