சட்டமன்ற மேனாள் அவைத்தலைவர் ஆவுடையப்பனுடன் கழகப்பொறுப்பாளர்கள் – இயக்க வெளியீடுகள் வழங்கல்

0 Min Read

அரசியல்

மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், கழக காப்பாளர் இரா.காசி, கழக மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர் சந்தித்து பயனாடை போர்த்தி, புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுக்கும் ஒவ்வொரு அறிக்கையினையும் படித்தால் போதும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் எனபெருமையுடன் குறிப்பிட்டார். அக்டோபர் திங்களில் பத்தமடை வருகைதரும் தமிழர்தலைவருக்கு நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பளிப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *