கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

3.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தேர்தல் பத்திர ஊழலை மறைக்கவே மோடி அரசு கச்சத்தீவு பிரச்சினையை தற்போது எழுப்பியுள்ளது, கனிமொழி தாக்கு.
* இந்தியா கூட்டணி அமைந்ததும், தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்கள், அரவிந்த்
கெஜ்ரிவால் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தல்.
* குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தெலுங்கானாவில் அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் அமைச்சர் உத்தவ் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2014 முதல், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மத்திய அமைப்புகளிடமிருந்து நடவடிக்கையை எதிர்கொண்ட 25 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர். அவர்களில் 23 பேர் விடுவிக்கப்பட்டனர்
* நாங்கள் 400 இடங்கள் பெற்றால், அரசியல் சட்டத்தை முழுவதுமாக திருத்துவோம் என ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசிய காட்சிப்பதிவால் சர்ச்சை. காங்கிரஸ் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை; ஒவ்வொரு ஜனநாயக மற்றும் சுதந்திரமான நிறுவனத்தையும் பாஜக அழித்து வருகிறது:. அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டங்களைத் தகர்க்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்று சரத் பவார் பேச்சு.
* அலோபதியில் கோவிட் நோய்க்கு நிவாரணம் இல்லை என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி மக்களுக்கு சொல்லும்போது, கண்களை மூடிக்கொண்டு இருந்தீர்களா, மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘பிரசாரத்தின் அப்பா’: பாஜக அரசியல் விளம்பரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி கிண்டல். மோடி தான் போரை நிறுத்தினார், சிக்கலில் இருந்த இந் தியர்களை காப்பாற்றினார் என்ற பாஜக காணொலிக்கு பதிலடி
* தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடிக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம்
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *