பெரம்பலூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில், மாவட்ட செயலாளர் விசயேந்திரன் முன்னிலையில் தஞ்சையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுதல் தொடர்பாகவும், “நாடாளுமன்றத் தேர்தலும் நமது கடமையும்” தொடர்பாக நேற்று (31.3.2024) ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் வருகின்ற 13.04.2024 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரம்பலூரில் நடத்த இருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக தலைவர் நடராசன், வ.களத்தூர் கிளை அமைப்பாளர் சர்புதீன், துரைசாமி, பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *