பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.இளங்கோவன் படத்திறப்பு – நினைவேந்தல்

Viduthalai
3 Min Read

ஆவடி. மார்ச் 30. சுயமரியா தைச் சுடரொளி பொறி யாளர் மு. இளங்கோவன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் துணைப் பொதுச்செய லாளர், தலைமைக் கழக அமைப்பாளர்கள் கலந்துகொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.
ஆவடி மாவட்டத்தில் நொளம்பூர் பகுதியில் வசித்து வந்த, பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு. இளங் கோவன் தனது 79 ஆம் வயதில், மார்ச் 25.03.2024 அன்று பிற்பகலில் உடல் நலிவு காரணமாக கால மானார். இவர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் காளாஞ்சிமேடு முருகையன் அவர்களின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது. அன்னாரது குடும்பத்தின் சார்பில் 26.03.2024 அன்று காலை 10.30 மணியளவில் நொளம்பூரில் உள்ள அவர் வீட்டில் வைத்து படத்திறப்பும், வீரவணக் கம் செலுத்தும் நிகழ்ச்சி யும் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. ஆவடி மாவட் டத் தலைவர் வெ.கார் வேந்தன் தலைமையேற்று நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். கழ கக் காப்பாளர் பா.தென் னரசு, தலைமைக்கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம், மாவட்டச் செயலாளர் க. இளவர சன், உடுமலை வடிவேல் மற்றும் உறவினர்கள் முன் னிலை வகித்து வீரவணக்க உரை ஆற்றினர்.

முன்னதாக துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் பொறியாளர் இளங்கோவன் படத் தைத் திறந்து வைத்தார்.அவர் (ஆசிரியரின்) இரங்கல் உரையில், சுய மரியாதைச் சுடரொளி யான பொறியாளர் மு. இளங்கோவன் எப்படிப் பட்ட கொள்கையாளர் என்பதைச் சுட்டிக் காட்ட அவரது பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் தமிழ்ப் பெயர்களை சுட்டிக்காட் டினார். அன்னாரின் இணையர் பெயரான ரஷ்யா வைக் குறிப்பிட்டு, தந்தை பெரியார் பெயர்க ளில் ஏற்படுத்திய புரட் சியை நினைவு கூர்ந்தார். அத்தோடு பொறியாளர் இளங்கோவன், சட்ட எரிப்புப் போராட்ட வீரர் காளாஞ்சிமேடு முருகையன் அவர்களின் மகன் என்பதை எடுத்துச் சொன்னதோடு, சட்ட எரிப்புப் போர் ஏன்? அதன் விளைவுகள் என்ன? என்பதை சுருக்க மாக விளக்கினார். இளங் கோவன் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை சுயமரி யாதைக்காரராகவே வாழ்ந்தவர்.

அப்படிப் பட்ட சுயமரியாதை வீர ருக்கு திராவிடர் கழகத் தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங் கல் அறிக்கை கொடுத்து உள்ளார் என்று எடுத்து ரைத்து, அறிக்கையை வாசித்துக் காட்டி, தனது வீரவணக்கத்தையும் செலுத்தி நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் பொறி யாளர் இளங்கோவன் இணையர் ரஷ்யா, மகன் அன்பரசு, மகள்கள் கவிதா, அமுதா, பெயரப் பிள்ளைகள் பிரியதர்சினி, கமலேஷ்வர், ரித்திஷ், சிந்தார்த், பிரசாந்த், தம்பி மேகநாதன், மருமகன்கள் கோபிநாத், பாலசங்கர் மற்றும் உறவினர்கள் பாலசுந்தரம், கலா, இர ணியன், சரோஜினி, சங் கீதா, கவுன்சிலர்கள் தில கர், ராஜா, நொளம்பூர் அசோசியேசன் உறுப்பி னர்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஓய்வூதியம் பெறுவோர் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோ ரும், மாவட்டக் கழகத் தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் தே. செ.கோபால், முகப்பேர் முரளி, அம்பத்தூர் சரவ ணன், தென்சென்னை செங்குட்டுவன், கொரட் டூர் பன்னீர்செல்வம், மதுரவாயில் வேல்சாமி, ஆ.வெ.நடராசன், அரும் பாக்கம் தாமோதரன், பெரியார் ராஜேந்திரன் மற்றும் திருவள்ளூர் பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பொறி யாளர் இளங்கோவன் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இறுதியில், இளங்கோவன் மகன் அன்பரசு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஏற் கனவே செய்திருந்த ஏற் பாட்டின்படி கீழ்ப்பாக் கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அன் னாரது உடல் ஒப்படைக் கப்பட்டது. வீட்டிலிருந்து முதன்மைச் சாலைக்கு வண்டியின் பின்னால் தோழர்கள் கொள்கை முழக்கங்களோடு சென்று அன்னாரது உடலுக்கு விடை கொடுத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *