கடலூர் – சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகள் ‘இந்தியா’ கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்!

viduthalai
1 Min Read

கடலூர், மார்ச் 27- கடலூர் மற்றும் சிதம்பரம் நாடா ளுமன்ற தொகுதிகளின் ‘இந்தியா’ கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட் டம் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம் தலைமையில் தொழி லாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் வடலூர் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் 24.3.2024 மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டத்தின் நோக் கத்தை விளக்கி திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர் முனைவர் துரை சந் திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்த னைச் செல்வன், சபா ராஜேந்திரன், அய்யப் பன், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் இள.புகழேந்தி, செந்தமிழ்ச் செல்வன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பி னர் பூ.தா.இளங்கோவன், சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி. இளங்கோவன், கட லூர் கழக மாவட்ட தலைவர் தண்டபாணி, செயலாளர் எழில் ஏந்தி, அமைப்பாளர் மணி வேல், கழகப் பேச்சாளர் யாழ் திலீபன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம் மற்றும் இந்தியா கூட்டணியினுடைய அனைத்து கட்சிகளின் மாவட்ட மாநில பொறுப் பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேர்தலில் நம்முடைய கடமையும் பொறுப்பும் எனும் தலைப்பில் அனை வரும் கலந்துரையாடினர். வலுவான கூட்டணியை வெற்றி கூட்டணியாக உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி பாராட்டும் தீர்மானமும், கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஷ்ணு பிரசாத், சிதம் பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோரை 2 லட்சம் வாக்குகளுக்கும் கூடுதலாக பெற்று வெற்றி பெறச் செய்வது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
ஒவ்வொரு தோழ மைக் கட்சிகளின் தோழர் களும் தொண்டர்களும் திண்ணைப் பிரச்சாரம் முதற்கொண்டு அனைத்து வகை பரப்புரையும் செய்து நாற்பதும் நமதே நாளை நமதே என்று தேர்தல் பணியாற் றிட கேட்டுக் கொள்ளப் பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *