கோயம்புத்தூர் ஒண்டிபுதூர் பகுதியிலுள்ள ஸ்டேன்சு காலனியில் வசித்து வரும் பெரியார் பெருந்தொண்டர், வசந்தம் கு.இராமச்சந்திரன் (மறைவு) அவர்களின் இணையர் ரெங்கநாயகி, தம் வீட்டில் சேகரித்து வைத்திருந்த பெரியாரியம், மார்க்சியம் மற்றும் பிற தமிழ் சார்ந்த 880 நூல்களை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக நூலகத் திற்கு நன்கொடையாக வழங்கினார். அந்நூல்களை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக துணை நூலகர் முனைவர் கி.ராஜீ மற்றும் அரசியல் அறிவியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இர.சாம்ராஜா ஆகியோர் பல்கலைக் கழகம் சார்பில் பெற்றுக்கொண்டனர்.