திருவாரூரில் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல்

1 Min Read

திருவாரூர், மார்ச் 12- திருவா ரூர் பெரியார் மன்றத்தில் 9.3.2024 மாலை 5 மணி அளவில் திராவிடர் கழக தொழி லாளர் அணியின் கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு சேகர் தலைமை ஏற்றார்.
திராவிடர் கழக தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி சிவா, திராவிடர் கழக விவசாய தொழிலா ளர் அணி செயலாளர் வீர கோவிந்தராஜ், தலைமை கழக அமைப்பாளர் திரு வாரூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஏராள மான தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்திற்கு நேரு அவர் கள் செய லாளராக நிய மிக்கப்படுவதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட் டது. நியமிக்கப்பட்டுள்ள நேரு அவர்களுக்கு திரா விடர் கழக பொறுப்பா ளர்கள் உதவி செய்து ஏராளமான உறுப்பினர் களை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரி யத்தில் உறுப் பினராகி பயன்பெறச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு சித்தார்த் தன் அவர்களையும் குட வாசல் ஒன்றியத்திற்கு செல்வகுமார் அவர்க ளையும் திருவாரூர் ஒன் றியத்திற்கு பாஸ்கரன் அவர்களையும் செயலா ளராக நியமிக்கப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *