தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ. 3.50 லட்சம் கோடி முதலீடுகள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

Viduthalai
1 Min Read

அரசியல்

தஞ்சாவூர்,செப்.29 – தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தார் தொழில்  துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா . 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தான் முதலில் முதலீடு செய்ய நினைக்கின்றனர். ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக சிலர் தமிழ் நாட்டை விட்டு வெளியேறி, வேறு மாநிலங்களுக்கு செல்வதாகக் கூறுகின்றனர். இருப்பினும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ. 3.50 லட்சம் கோடிக்கு தமிழ் நாட்டுக்கு முதலீடுகள் பெறப்பட்டுள் ளன. தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு புதிய தொழில் வளர்ச்சியைக் கொண்டு வர உறுதுணையாக இருப்போம்.

தென்னை விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தென்னை சார்ந்த தொழிற்சாலை தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசியுள்ளோம். நிலம் தொடர்பான தேர்வில் சிக்கல் இருக்கிறது. இருப் பினும், சில இடங்களில் நிலங்களை தேர்வு செய்துள்ளோம். இன்னும் சில வாரங்களில் நிலத்தை அளவீடு செய்துவிட்டு, முதலீட்டாளர்களை அழைத்து வர உள்ளோம்.

தமிழ்நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுர அடி அளவில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களை நோக்கி தமிழ்நாடு நகர்ந்து கொண் டிருக்கிறது. தமிழ்நாட்டை அறிவு சார்ந்த தலைநகரமாக மாற்றவுள் ளோம்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் முதலீட்டாளர்களுக்கு சொல்கிற ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் ஏற்கெ னவே முதலீடு செய்தவர்கள் மீண்டும் முதலீடு செய்கின்றனர் என்றார் அமைச்சர் ராஜா.

பின்னர், டான்டெக்ஸ் ரவுன்டானா அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை அமைச்சர் ராஜா ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *