கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு

1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் “மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா” என நடைபெற்று வருகின்ற தொடர் விழா நிகழ்ச்சிகளின் 50ஆம் நிகழ்ச்சி “சூரியச் சுடர் – 50, நெஞ்சுக்கு நீதி வழி! திராவிடமே ஒன்றியத்தின் ஒளி!!” என்னும் தலைப்பில் நேற்று (6.3.2024) நடைபெற்றது. நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்த தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் நிறைவாக சிறப்புரையாற்றினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு, மேனாள் நீதிபதி கே.என். பாஷா மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் உரையாற்றினர். மேனாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ப. ரங்கநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மைதானம் நிரம்ப மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். (பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானம், கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை – 82)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *