தஞ்சையில் முதலமைச்சர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் பார்வையிட்டனர்

Viduthalai
1 Min Read

அரசியல்

திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் 6.10.2023 அன்று நடைபெறவிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறக் கூடிய அரங்கத்தினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,  தஞ்சை மத்திய  மாவட்ட தி,.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு விழா தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து விழா நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தனர். உடன்:  திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில கிராமப் பிரச்சார செயலாளர் க. அன்பழகன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன்,  தஞ்சை மாவட்ட காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்,  மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ. அருணகிரி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிகுமார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன்  மற்றும் தோழர்கள்  (4.10.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *