தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.23 மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த 12.2.2024 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மறைந்த மேனாள் ஆளுநர் பாத்திமா பீவி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மற்றும் மறைந்த மேனாள் உறுப்பினர்களுக்கு பேரவையில்13-ஆம் தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன் மொழிந்த 2 அரசினர் தனி தீர்மானங்கள் 14-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் 15-ஆம் தேதி பதிலுரை அளித்தார். பொது பட்ஜெட் 19-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் 20ஆ-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 21-ஆம் தேதி நடந்தது. அதற்கு அமைச் சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர் செல்வம் நேற்று (22.2.2024) பதில் அளித்தனர்.

புதிதாக மாநில நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு மருத்துவமன்றம் அமைப்பது ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக புதிய சட்டம் உருவாக்குவது உள்ளிட்ட 14 சட்ட மசோ தாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, பேரவையை ஒத்திவைப்பதற்காக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர் மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட் டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவ தாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *