தந்தை பெரியாரின் வழியில் பெண்களின் சமூக – பொருளாதார விடுதலைக்காக உழைத்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 Min Read

சென்னை,பிப்.23- முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘‘பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து, அவர்கள் வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் – அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்பமாட்டாள்” என்று ஓங்கி ஒலித்த தந்தை பெரியாரின் வழியில் பெண்களின் சமூக – பொருளாதார விடுதலைக்காக உழைத்து வருகிறது நமது ‘திராவிட மாடல்’ அரசு.

அதில் மற்றுமொரு பெருமுயற்சியாக, மகளிரின் உடல் நலன், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, அரசியல் பங்கேற்பு, தொழில்முனைவு போன்றவற்றை மேம்படுத்து வதை இலக்காகக் கொண்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-அய் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிட்டேன். பாலினநீதி இல்லாமல் சமூக நீதி இல்லை.

மேலும், காவல்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்புகள், காவல் நிலையக் கட்டடங்கள், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொதுத்துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஓய்வு இல்லத்தையும் திறந்து வைத்தேன்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *