‘பானை’ சின்னம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.22- மக்களவைத் தேர்தலில் வி.சி.க. 5 மாநிலங்களில் போட்டியிடவுள்ளதாக வும், பானைச் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத் துள்ளதாகவும் அக்கட்சி யின் தலைவர் திருமா வளவன் கூறியிருக்கிறார்.
கடந்த நாடாளுமன் றத் தேர்தலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட் டியிட்டு வெற்றி பெற்ற னர். அதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப் பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டி யிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர்.

இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டி யிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட் டது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி அங்கம் வகிக் கும் வி.சி.க., இந்தியா கூட் டணியில் விரைவில் மக் களவைத் தேர்தலில் போட் டியிடுகிறது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வரு கிறது.
இதற்கிடையில், டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் வி.சி.க.வுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வலியு றுத்தி திருமாவளவன் நேரில் சென்று நேற்று (பிப். 20) மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா மற்றும் கருநாடகா மாநி லங்களில் விசிக சார்பில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாகவும், வி.சி.க.வுக்கு சுயேட்சை சின்னத்தில் இருந்து பானைச் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத் துள்ளதாகவும் கூறினார்.
மேனாள் குடியரசுத் தலைவரும், ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுத் தலை வருமான ராம்நாத் கோவிந்தை நேரில் சந் தித்து, ஒரே தேர்தல் என் பது அதிபர் ஆட்சிக்கு வழி வகுக்கும் என்றும், அதனைக் கைவிட வேண் டும் எனவும் வி.சி.க. சார்பில் கோரிக்கை மனுவை அளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *