மணலுக்கு மாற்று கிராபின்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இன்றைய நாட்களில், கான்கிரீட் கட்டடங்கள் கட்டுவதற்கு இன்றியமையாத தேவையாக இருப்பது மணல். கான்கிரீட் என்பது தண்ணீர், சிமெண்ட், மணல் ஆகியவை சேர்த்து உருவாக்கப்படுவது. கட்டடங்கள் பெருகப் பெருக மணலின் தேவை அதிகரிக்கிறது.
அதிக அளவில் நீர்நிலைகளின் அருகேயுள்ள மணலை அள்ளுவதால் இயற்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மணலின் அளவைக் குறைப் பதற்காக பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்று கிராபினைச் சேர்த்தல்.
கான்கிரீட்டின் வலிமை அதிகரிப்பதற்குக் குறிப் பிட்ட அளவு கிராபின் சேர்ப்பது வழக்கம். கிராபின் என்பது கரிமத்தால் ஆனது. கிராபின் தகடுகள் வலிமையானவை.
இதற்கு முன்பு போல் அல்லாமல் தற்போது அமெரிக்காவின் ரைஸ் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மணலை முற்றிலும் தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக கிராபினைப் பயன்படுத்தி கான்கிரீட் உருவாக்கி உள்ளனர்.
இந்தப் புதிய கான்கிரீட்டின் எடை மணலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கான்கிரீட் எடையை விட, 25 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால், கடினத்தன்மை 32 சதவீதம் அதிகரித்தது, வலிமை, 21 சதவீதம் அதிகரித்தது.
இந்த ஆய்வில், கரியில் இருந்து கிடைக்கும் ‘கோக்’கை மின்சாரம் பாய்ச்சி அதிக வெப்பத்தில் எரிப்பதன் வாயிலாகக் கிடைத்த கிராபின் துகள்கள் பயன்படுத்தப் பட்டன.
சாதாரணமாக இயற்கையில் கிராபின் கிடைப்பது அரிது. செயற்கையாக இதை உருவாக்குவதும் அதிக செலவு பிடிக்கும். இது மட்டும் தான் தற்போது புதிய கான்கிரீட்டை உருவாக்குவதில் இருக்கும் ஒரே சிக்கலாக உள்ளது. இதற்கும் விரைவில் தீர்வு காணப்படும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *