கிராமப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி திட்டம்

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.14- ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அல்ட்ராடெக் சிமெண்ட்டின் அரவை ஆலையான அரக்கோணம் சிமெண்ட் ஒர்க்ஸ், தன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 2,000 கிராமப்புறப் பெண்கள் நிலையான வாழ்வாதாரத்தைப் பெறவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளது.
சுயதொழில் மற்றும் உள்ளூர் ஜவுளி ஆலைகளில் வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆலையின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புக் குழு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி மய்யத்தை அமைத்து பெண்களுக்கு இலவசப் பயிற்சியைத் தொடங்கியது.
இதுவரை சித்தேரி, தண்டலம், பரிதிபுத்தூர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 2,202 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி பெற்ற சுமார் 800 பெண்கள் அம்மையப்பர் டெக்ஸ்டைல்ஸ் போன்ற ஜவுளி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அல்ட்ராடெக் தனது சமூக முன்னோடித் திட்டங்களை திருமதி ராஜசிறீ பிர்லாவை தலைவராகக் கொண்டு ஆதித்ய பிர்லா சமூக முன்முயற்சிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மய்யத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அல்ட்ராடெக்கின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு கவனம் செலுத்தும் பிரிவுகள் கல்வி, சுகாதாரம், நிலையான வாழ்வாதாரங்கள், சமூக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூகத் தேவைகள் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *