அடாவடி அரசியல் நடத்தும் ஆளுநர் ஆர்.என் ரவியின் ஜனநாயக விரோத செயலை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் சார்பில் 14.2.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு அம்பத்தூர் OT பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை,திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன், அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்.சரவணன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.