மாவட்டக் கழக அலுவலகம் அமைத்து அங்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிலையை நிறுவ சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

சோழிங்கநல்லூர்,பிப்.14- சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.2.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.ஆனந்தன் அலுவலகத்தில் நடை பெற்றது.
இந்தக் கூட்டத்தில் சுண்ணாம்புக் குளத்தூர் விடுதலை நகரில் செயல்பட்டுவரும் நூலகத்தைப் புதுப் பித்து, அங்கு நமது மாவட்டக் கழகத்தின் அலுவலகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அங்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் மார்பளவு சிலையை நிறுவ வேண்டும் எனவும், அந்தச் சிலையை அமைக்கும் செலவை த.ஆனந்தன் ஏற்றுக்கொள்வதாக வும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்கள்.
நூலகத்தைப் புதுப்பிக்கும் செலவை மற்ற மாவட்டத் தோழர்கள் பகிர்ந்து கொள்வது எனவும் பற்றாக்குறை ஏற்படுமானால் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் ஏற்றுக் கொள்வதாகவும் . அறிவித்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் கடந்த 27.1.2024 அன்று மடிப் பாக்கத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவாகவும் அவரின் இறுதி உரை தெருமுனை கூட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து மேடை, இருக்கை மற்றும் ஒலி – ஒளி அமைத்துக் கொடுத்த 187 ஆவது வட்ட திமுக செயலாளர்
எம்.ஆர்.ஜெய் அவர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த செந்தில்நாதன், ஸ்டார் மனோகரன், சோழிங்க நல்லூர் மாவட்ட திமுக அவைத் தலைவர் அரிகிருஷ் ணன் அவர்களுக்கும், எங்களுக்கு எல்லா வழியிலும் ஒத்துழைப்பினை நல்கிவரும் திமுக நிர்வாகி தயாளன் அவர்களுக்கும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த 187 வட்ட மாமன்ற உறுப்பினர் ஷெர்லிஜெய் அவர்களுக்கும், 188 வது மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் அவர்களுக்கும் மற்றும் விசிக பெருமாள் அவர்களுக்கும். மடிப்பாக்கம் சிபிஎம் செயலாளர்
எஸ்.பாமா அவர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக கூட்ட வரவு-செலவு படிக்கப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு,விஜய் மாவட்டச் செயலாளர் உத்தமன் ராஜ், துணைத் தலைவர் தமிழ் இனியன், ப.க. தலைவர் த.ஆனந்தன், மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.சி.ஜெய ராமன், ப.க. துணைத் தலைவர் கே.ராஜா, மாவட்ட இளை ஞரணி தலைவர் மு நித்தியானந்தன், கோவிலம்பாக்கம் கிளை செயலாளர் வே மணிகண்டன், மாவட்ட மகளிர் அணித்தலைவர் ஜெ.தேவி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *