காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும்!

1 Min Read

கன்னியாகுமரி – திருவள்ளுவர் சிலை அருகே
ராமன் கொடி – காவிக்கொடியா?
காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும்!

தமிழ்நாடு

கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் (திருவள்ளுவர் சிலையருகே) ஏற்றப்பட்ட ராமன் கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் ஒளிப்படம் வெளியான நிலையில், எதிர்ப்புகள் வெடித்ததால் நேற்று முன்தினம் (6-2-2024) இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமன் கொடி அகற்றப்பட்டது. ஆனால், அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏதாவது பிரச்சினையை எழுப்பி, கலவரத்தை உண்டாக்கும் அராஜகப் புத்தியோடு சங் பரிவார்கள் திட்டமிட்டுச் செயல்படுவது அப்பட்டமாகவே தெரிகிறது.
காவல்துறை உடனடியாக காவிக் கொடியை அகற்றுவதுடன், அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டும். இதில் அலட்சியம் வேண்டாம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *