திருச்சி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் தோழர் சு.ராஜசேகரின் தாயார் நேற்று (22.11.2023) இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர் உடலுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், தோழர்கள் திருச்சி மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், திருச்சி மாவட்ட மேனாள் தலைவர் கணேசன், திராவிடர் கழக காப்பாளர் நற்குணம், மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ், தில்லைநகர் பகுதி தலைவர் ராமதாஸ், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மகாமணி, காட்டூர் பகுதி செயலாளர் சங்கிலிமுத்து, பாச்சூர்அசோகன், ஜெயில் பேட்டை குணா, இளைஞர் அணி மாவட்ட தலைவர் அறிவுச்சுடர், தில்லை நகர் பகுதி துணைத்தலைவர் பிரவீன் குமார், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் கருப்பு, கோகுல் மற்றும் தோழர்கள் திரளாக அம்மையாருக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
கழகத் தோழரின் தாயார் மறைவு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books