குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்.12இல் தொடக்கம்

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.4- அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022இல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவு களும் வெளியிடப்பட்டுவிட்டன.

அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகொண்ட குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்களுக்கு தகுதியானவர் களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர் முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பி எஸ்சி 3.2.2024 அன்று வெளியிட்டது.
இவர்களுக்கு பிப்ரவரி 12 முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வர்கள், அனைத்து அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைகூட சமர்ப்பிக்க தவறினால் அடுத்தகட்ட தேர்வுக்கு அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *