அறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று (03.2.2024) சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில் திரவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாவட்ட தலைவர் வே.அன்பரசன், செயலாளர் கி.அறிவழகன், துணைத்தலைவர் மு.குப்புசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் தா. இளம்பரிதி, தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார், இளைஞரணித் தலைவர் தி.இராசா, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், நகராட்சி தலைவர்கள் சு.துளசிராமன்,மு.ஆறுமுகம்,எஸ்.கிருஷ்ணசாமி, கு.உலகநாதன்,களஞ்சியம் வெங்கடேசன்,பே.ஆதிநாராயணன், முகமது நிஜாம், ஜீவன் சார்வாகன், கல்பனாதுளசிராமன்,லாரன்ஸ், திராவிடர் கழக மேனாள் தலைவர் தெ.தியாகு, சமூக ஆர்வலர்கள் தினா, காசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அறிஞர் அண்ணா நினைவு நாள்: தமிழர் தலைவர் புதுச்சேரியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books