ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள் முதல்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.14- தமிழ்நாடு முதல மைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1666 அடிச் சட்டங்கள் கொள்முதல் செய்வ தற்கு ஆணை வழங்கப் பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர் பாக வெளியிடப்பட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட் டங்கள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. போக்கு வரத்து கழகங்களின் பேருந்துகளை மேம் படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (விழுப் புரம்-344, சேலம்-84, கோயம்புத்தூர்-263, கும்பகோணம்-367, மதுரை-350, திருநெல்வேலி-242) என மொத் தமாக நகர மற்றும் புறநகர் பேருந்து சேவை களுக்காக 1650 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கும், மலை வாழ் மக்க ளின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து (கோயம் புத்தூர்) கழகத்திற்கு பிரத்யேக மான 16 அடிச்சட்டங்களும் ஆக மொத்தமாக 1666 அடிச்சட் டங்கள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தி யாளர்களுக்கு ஆணை வழங்கப் பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப் படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. -இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *