ராமநவமி – சிவராத்திரிக்கு பொது விடுமுறைக்கு உத்தரவிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

1 Min Read

சென்னை, ஜன.21 ராம நவமி, சிவராத்திரி விழாக்களுக்கு பொது விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கடலூரை சேர்ந்த அர்ஜூனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ராம நவமிமற்றும் சிவராத்திரி போன்ற முக்கியமான இந்து விழாக்களுக்கும்பொது விடுமுறை அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ஏனெனில் இந்த விழாக்களை இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் கொண்டாடுகின்றனர். எனவே இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த விழாக்களுக்கு பொது விடுமுறை அளிக்க ஒன்றிய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ராம நவமி, சிவராத்திரி போன்ற விழாக்களுக்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து ஒன்றிய அரசை மீண்டும் அணுகலாம், எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *