துறையூர், அக். 15- துறையூர் கழக மாவட்ட சார்பில் ஆசிரியர் அவர்களுக்கு வேன் வழங்கும் விழா பற்றி செய்யவேண்டிய செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடல் கூட்டம் நேற்று (14.10.2023) மாலை 7.00 மணிக்கு மாவட்ட ப.க.தலைவர் அ.சண்முகம் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ப. க. தலைவர் அ. சண்முகம் முன் னிலை வகித்தார்.
வரும் 20.10.2023 அன்று நடைபெறும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வேன் வழங்கும் விழாவிற்கு கார் மற்றும் வேனில் கலந்து கொள்வது, விழாவிற்கு நிதி நன்கொடை சேகரித்து ரூபாய் ஒரு லட்சம் வழங் குவது, விழா பற்றிய நோட் டீஸ் அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வழங்கு வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி நன்றி கூறினார்.
அனைவருக்கும் மாவட்ட ப. க. தலைவர் அ. சண்முகம் அவரது வாழ்விணையர் மாலினி ஆகியோர் தேநீர் விருந்து வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி ரூபாய் 5000 மற்றும் மாவட்ட ப. க. தலைவர் அ. சண்முகம் ரூபாய். 4000 வழங்கினர்.