மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (16.10.2023), சென்னை, சைதாப்பேட்டையில், கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 நபர்களுக்கு தலா ரூ.12,700/-, 3 நாள்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 பேருக்கு தலா ரூ.4,300/-, விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு ரூ.4,00,000/- வழங்கினார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மத்திய சென்னை வருவாய் கோட்டாச்சியர், கியூரி, மாம்பலம் வட்டாச்சியர் பாலாஜி பாரதி, மாமன்ற உறுப்பினர் சிறீதரன், மோகன்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books