பி.ஜே.பி. ஆட்சியில் ஜனங்களும் – பிணங்களும்!

1 Min Read

கடந்த 30.12.2023 அன்று அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவில் விமான நிலையத்தைத் திறந்தார் பிரதமர் மோடி. ஏற்கெனவே அயோத்தி என்று இருந்த ரயில் நிலையத்திற்கு அயோத்தி தாம் என்று பெயர் சூட்டி அங்கிருந்து நாடு முழுவதும் செல்லும் பல வந்தே பாரத் ரயில் களுக்கு காணொளியில் பச்சைக்கொடி காட்டு கிறார். அதன் பிறகு அயோத்தியில் 12 கிலோ மீட்டர் ‘ரோடு ஷோ’ செல்கிறார்.

அன்று மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மட்டுமே ரூ 200 கோடிக்கு மேல் செலவானதாக உள்ளூர் பாஜகவினர் பெருமையோடு கூறு கின்றனர்.
அதே அயோத்தியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்பூரில் வீடற்ற முதிய வர்கள் சுடுகாட்டில் எரியும் பிணங்களுக்கு நடுவே தூங்குகின்றனர். காரணம் கேட்டால் ‘‘இங்கே கதகதப்பாக உள்ளது, பெரிய சுடுகாடு என்பதால் ஒரு நாளைக்கு 10 பிணம் எரியும். ஆகையால் வெப்பம் எப்போதும் கிடைக்கும்” என்கிறார்கள்.

வீடு இல்லையா என்று கேட்டால், ‘‘தகரத்தாலும், கற்களாலும் எழுப்பப்பட்ட தங்குமிடத்தில் நாய் பூனை கூட வராது; வயதான நாங்கள் எப்படி தூங்கமுடியும்” என்று கேட்கின்றனர்.
உலகத் தலைவர்கள் வரிசையில் மோடிதான் முதல் மனிதர் என்று மாதம் ஒருமுறையாவது ஊடகங்கள் ‘உதார்’ விடுகின்றன. அந்த மோடியின் கட்சி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஜனங்களும், பிணங்களும் கலந்து உறங்குகின்றனர்.

– மின்சாரம் –

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *