கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

28.12.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* மதமும், அரசியலும் தனித்தனியே இருக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6200 கி.மீ. ராகுல் நியாய நடைப்பயணம், ஜனவரி 14இல் தொடங்கிட முடிவு.
* “அனைவருக்கும் அனைத்தும்” என்கிற முற்போக்கான சமூகத்திற்கு திராவிட மாடல் அரசு பாடுபட்டு வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா
* மோடி அரசின் அம்ரித் பாரத் ரயிலில் மற்ற மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை விட இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கான அடிப்படைக் கட்டணம் சுமார் 17% அதிகம் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஆசிரியர்களுக்கு கீதை கட்டாயப் பாடம்: ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தங்கள் அலுவலக நேரத்திற்கு அப்பால் கீதை குறித்த பாடநெறிக்கு வருமாறு கல்லூரி வற்புறுத்துவதாகவும், இந்த நடவடிக்கை ராமானுஜர் கல்லூரி நிர்வாகத்தின் “எதேச்சதிகாரப் பண்பு” என்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *