பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள்

1 Min Read

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வல்லத்தில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.சிறீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பழைய பேருந்து நிலையத்திலுள்ள உள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதிய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக இயக்குநர் பேரா எஸ். செந்தமிழ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *