பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள்

viduthalai
1 Min Read

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வல்லத்தில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.சிறீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பழைய பேருந்து நிலையத்திலுள்ள உள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதிய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக இயக்குநர் பேரா எஸ். செந்தமிழ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *