குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபட்ட 20 பேருக்கு சென்னையில் குண்டர் சட்டத்தில் சிறை

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 22- சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். சென் னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடு படுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண் டர் சட்டத்தில் சிறையில் அடைக் கப்படுகின்றனர்.

கடந்த 01.01.2023 முதல் 20.12.2023 வரை சென்னை பெருநக ரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட் டதாக 459 பேர், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 116 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 84 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் உட்பட மொத்தம் 687 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிச.14 முதல் 20 வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் 3 பெண்கள் உட்பட 20 பேர் மீதுகுண்டர் சட் டத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர். இதுஒருபுறம் இருக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபடு பவர்களை தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். அவ்வகை குற்றச் செயல்களில் யார் ஈடுபட் டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *