பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த திட்டம் அமைச்சர் துரைமுருகன் தகவல்

viduthalai
1 Min Read

வேலூர், டிச.16- பூண்டி, செம் பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த குழு அமைக்கப்பட்டுள்ள தாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, நடப்பாண்டுக் கான கரும்பு அரவை பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியா ளர்கள் சந்திப்பில் நீர் வளத் துறை அமைச் சர் துரைமுருகன் கூறும் போது, ‘‘சென்னையைச் சுற்றி நீர் நிலை களை உரு வாக்க தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக ஆலோ சித்து வருகிறது. ராமனஞ்சேரியில் மிகப்பெரிய தடுப்பணை கட்ட ஆலோசனை செய்யப் பட்டது. ஆனால், அங் குள்ள மக்கள் போதிய அளவு ஒத்து ழைப்பு அளிக்கவில்லை.

மற்றொரு இடமாக திருக்கழுக் குன்றம் ஏரி யில் கடந்த ஆட்சி யா ளர்கள் தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்தும் முடியவில்லை. எனவே, சென்னையைச் சுற்றியுள்ள பூண்டி, செம்பரம் பாக்கம் ஆகிய ஏரிகளில் ஒரு அடி அளவுக்கு கொள்ளளவு நீர்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக, குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அந்த குழு அறிக்கையின்படி அதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப் படும். சென்னை சுற்றி உள்ள நீர்நிலைகளை ஆக் கிர மித்துள்ள பகுதிகள் அதிகளவில் அகற்றப்பட் டுள்ளன. ஆக்கிரமிப்பு களை அகற்றும் பட்சத் தில் அரசியல் தலையீடும் உள்ளது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *