செய்திச் சுருக்கம்

1 Min Read

அரசாணை

கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சிகளுக்கு நிதி அதிகாரம் உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நூலகம்

அதிநவீன வசதிகளுடன் மதுரை கலைஞர் நூலகம் பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்.

விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 161 காலி பணியிடங்களுக்கு மொத்தம் 1114 பேர் விண்ணப் பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வாணை யம் தகவல்.

நடவடிக்கை

விமான நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் உள்பட பயணிகளின் பல்வேறு பிரச்சினைகளைக் களைய 2,400 சிஅய்எஸ்எப் இடங்கள் புதிதாக உருவாக்க ஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

ஒத்தி வைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால், முன்னதாக பிறப்பித்த இடைக்கால தடை தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

தண்டிக்கலாம்

அரசு ஊழியர் லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், அவரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கான வழிவகை உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

பொருத்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து வகுப்புகள் மற்றும் பள்ளி வளாகங்கள் என மொத்தம் 636 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *