குமரி மாவட்ட கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பரப்புரை

Viduthalai
0 Min Read

தோவாளை,நவ.25- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கழக கொள்கை விளக்கப் பரப்புரை நிகழ்ச்சி தோவாளை ஒன்றியம் பூதப்பாண்டி பேரூராட்சி திட்டு விளை சந்திப்பில் நடைபெற்றது.

கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பரப்புரை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.  

தந்தை பெரியார் மற்றும் திராவிடர்தி.மு.கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள், திராவிடர் கழக கொள்கை விளக்க நூல்கள் திட்டுவிளைப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *