இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர் கைது

viduthalai
1 Min Read

நாகை டிச. 10 கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள் ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட் டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களின் இரண்டு விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
மிக்ஜாம் புயலால் கடந்த ஒரு வார காலமாக மீன் பிடிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. இதனால், மீன்பிடிக்க செல் லாமல் நாகப்பட்டினம் மீனவர்கள் படகு களைக் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் மீன்பிடி அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் மீன்பிடித்துக் கொண்டி ருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி 2 விசைப்படகை சிறைபிடித்து அதிலிருந்த 25 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *