தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

viduthalai
1 Min Read

மதுரை, டிச. 9 – சிபிஅய் தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிகழ்வு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிய சிபிஅய், காவல் துறை ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஅய் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

இதனிடையே, சிபிஅய்-யின் நடவடிக்கை சட்ட விதி முறைகளுக்கு எதிரானது என மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிபிஅய்-யின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக் கிச்சூடு வழக்கில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற சிபிஅய்-யின் குற்றப்பத்திரிகையை நிராக ரித்தது. மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து, ஆறு மாதத்திற்குள் புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *