நேற்று (29.11.2023) ஒட்டன்சத்திரத்தில் மாண்புமிகு. உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை கழக தொழிலாளரணிச் செயலாளர் திருச்சி மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், பேரவைத் தலைவர் கருப்பட்டி.சிவா, வேடசந்தூர் ராமகிருஷ்ணன், வழக்குரைஞர் ஆனந்தன், ஆசிரியர் கலாநிதி, பழனி மாவட்டத் தலைவர் முருகன், ராதா ஆகியோர் சந்தித்து ‘தாய்வீட்டில் கலைஞர்’ நூல் தந்து பயனாடை அணிவித்தனர். அமைச்சர் அவர்கள் 100 விடுதலைச் சந்தாக்கள் (ரூ.2,00,000) வழங்கினார்.