சுயமரியாதை நாளில் தாராபுரத்தில் குருதிக்கொடை

Viduthalai
1 Min Read

தாராபுரம், நவ. 29 – 1998 டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்த நாளில் தந்தை பெரியார் குருதிக் கொடை மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்ப ட்டது.

அந்நிகழ்வில் தாரா புரம் கழகத்தின் மூத்த முன்னோடிகளான வடிவேல், நாகசுந்தரம், தா.சா.பாலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு,  தாராபுரம் அரசு மருத்து வமனையில் குருதிக் கொடை முகாம் நடத்தி, 23 நபர்கள் குருதி வழங் கினார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 2 , தமிழர்களின் தன்மான மீட்பு போராளி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வயது 91. அவரை வழிகாட்டியாகக் கொண்டு இடைவிடாது இயங்கி வரும் தந்தை பெரியார் குருதிக்கொடை மன்றத்தின் வயது 25.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில் மக்களால் நன்கு அறியப் பட்ட அமைப்பாகும். “கருப்பு சட்டைக்காரன்., காவலுக்கு கெட்டிக்கா ரன்” என்ற பழமொழிக்கு ஏற்ப பல விருதுகளை தந்து பாராட்டினர்.

ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளில் துவக்கப் பட்டதால் அவரைப் போலவே இடைவிடாது குருதிக் கொடை விழிப் புணர்வு, குருதிக்கொடை செய்தல் போன்ற பணி களை மட்டுமல்லாது, தாராபுரம் அரசு மருத்து வமனைக்கு குருதி சேமிப்பு வங்கியையும் மருத்துவர்கள் துணை யோடுஉருவாக்கினோம்.

இன்று ஆசிரியர் அவர் களின் உத்வேக உழைப்பி னால் தமிழ் சமுதாயம் அடைந்த பயனில், (அவ ரது பிறந்த நாளில் துவங்கிய அமைப்பினால்) ஒரு சிறு துளியை தாரா புரமும் பெற்றது என்றால் மிகையல்ல!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *