செய்திச் சுருக்கம்

1 Min Read

தொழில்

சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் வரும் 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. அதன்படி சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முகாமில் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 044-22252081, 22252082, 9677152265, 8668102600 என்ற எண்ணில் அழைக்கலாம்.

கடலோர…

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தில் இன்று முதல் 4 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல.

நிதி செலுத்த

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயி ரத்திற்கும் மிகாமல் ஊதி யம் பெறும் தொழிலாளர் களின் 2022ஆம் ஆண் டிற்கான தொழிலாளர் நல நிதி தொகையை வரும் 31ஆம் தேதிக்குள் தமிழ் நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு வங்கி வரை வோலை அல்லது காசோ லையாக அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாராட்டு

தமிழ்நாட்டில் போதைப் பொருள்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *